தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து நடத்தும் நாடார் சுயமரியதை மாநாடு ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து நடத்தும் நாடார் சுயமரியதை மாநாடு ஆலோசனை கூட்டம் சென்னை வடபழனி உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேசுநாடார் தலைமை தாங்கினார் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் , சத்திரிய பாசறை தலைவர் ஆதித்தியா சம்பத்குமார் . தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் கு.சிவாஜிராஜன் காமராஜர் தேசிய மக்கள் இயக்கம் சாலிபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்

செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை சைதைாப்பேட்டை அன்னை வேளாங்கன்னி கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து நாடார் சுயமரியதை மாநாடு இம்மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணிராமதாஸ் எம்.பி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் , ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் , நீதிபதிகள் , மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்

அச்சம் அகற்றிய அண்ணல் ஊ.பு.அ.சௌந்திரபாண்டியார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு 130 சிறந்த சங்கங்களுக்கு விருதுகள் 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு , மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் நலிந்தவர்களுக்கு நலத்திட்ட வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் சங்க பொது செயலாளர் வி.எல்.சி.ரவி , பொருளாளர் ஆடிட்டர் க.சிவராஜ் , அமைப்பாளர் மார்கெட்ராஜா , காப்பாளர் செ.வீரக்குமார் , கொள்கை பரப்பு செயலாளர் சி.பா.பாஸ்கர் தலைமை நிலைய செயலாளர் வ.சி.பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *