சென்னை மேயர், #sourcesegregationchallenge2022-ஐ தொடங்கி வைத்தார்

• சென்னை என்விரோவின் பிரச்சாரம்சென்னையின் குடிமக்களிடையே நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளைவேரூன்ற செய்வதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னை, 09 ஜூலை 2022: ரீ சஸ்டைனபிலிட்டி லிமிடெட் இன் துணை நிறுவனமான சென்னை என்விரோ, பொதுமக்களிடையே கழிவு மேலாண்மை நடைமுறைகளில் நடத்தை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், #sourcesegregationchallenge2022 என்ற முழு அளவிலான மூலப் பிரிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில், மக்கள், பிரிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் -ஈரமான மற்றும் உலர்ந்த- ஒரு படத்தைக் கிளிக் செய்து, #sourcesegregationchallenge2022 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அவற்றை பேஸ் புக் , ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம்  இல் பகிர்வது அடங்கும்.

சவாலை ஏற்க மற்ற மூவரை பங்குபெற செய்யும் அதே சமயம் இந்த பிரச்சாரத்தை மாண்புமிகு சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன் தொடங்கி வைத்தார், அவர் தனது சமூக ஊடகமான @PriyarajanDMK இல், சென்னை சுற்றுச்சூழல் மண்டல அலுவலகத்தில் பிரிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளுடன், ஒரு செல்ஃபியை வெளியிட்டார். செல்ஃபி சவால் முழு வீச்சில் தொடங்கியுள்ளது மற்றும் சென்னை என்விரோ, நகரத்தின் நிலைத்தன்மை கூட்டாளியாக, “சுற்றுச்சூழல் சாம்பியன்களுக்கு” LED தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட அற்புதமான பரிசுகளை வழங்கும்.

இந்த ஊடாடும் பிரச்சாரம், மறுசுழற்சி மேலாண்மையை வலுப்படுத்தும் அதே வேளையில், வீட்டில் கழிவு பிரித்தலின்  முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவும். ஒவ்வொரு வீட்டிலும் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை தினசரி நடைமுறைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தவிர, சென்னை என்விரோ, வெகு ஜன சுத்த  இயக்கங்கள், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் கழிவுகளை பிரித்தெடுப்பதில் குறைந்த இணக்கம் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தும் பிரச்சாரங்களையும்  மேற்கொள்கிறது. தெற்கு பெருநகரத்தின் குடிமக்களுக்கு கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் இது நகரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.

திருமதி பிரியா ராஜன் பேசுகையில், “சென்னை என்விரோ நிறுவனம், சென்னையில், முன்மாதிரியான சுற்றுச்சூழல் சேவையை வழங்கி வருகிறது. நகரின் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மணலி மண்டலத்தில், அனைத்து மகளிர் அணியுடன், 95% ஆதாரப் பிரிவை எட்டியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நகரத்தை தூய்மைப்படுத்துவதிலும், தூய்மையான நாளைய தினத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதிலும் சென்னை என்விரோ வெற்றிபெற வாழ்த்துகள். குப்பைகளை பிரித்தெடுப்பது அடிமட்ட அளவில் கையாளப்பட வேண்டும், மேலும் இந்த சவாலில் கலந்து கொண்டு முறையே உலர் கழிவு மற்றும் ஈரக்கழிவுகளுக்கு இரண்டு தனித்தனி தொட்டிகளை பராமரிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வருவோம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நமது பங்களிப்பை வழங்குவோம்” என்று கூறினார்.

பிரச்சார துவக்கம் குறித்து ரீ சஸ்டைனபிலிட்டி இன் இணை நிர்வாக இயக்குநர் மசூத் மல்லிக் கருத்துத் தெரிவிக்கையில், “நிலையான கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மேலாண்மையை செயல்படுத்துவதற்கு மூலப் பிரிப்பு முற்றிலும் முக்கியமானது. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், மூலப் பிரித்தலை  செயல்படுத்த உதவும் அறிவைக் கொண்டு அவர்களுடன் கூட்டுசேரவும் , அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம். எங்கள் சமீபத்திய பிரச்சாரம், #sourcesegregationchallenge2022, இந்த சவாலில் சிறந்த பங்கேற்பாளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதன் மூலம் அதையே அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது, வைரலான சமூகப் பிரச்சாரத்தைத் தூண்டி,  இறுதியில் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் மேலும் சென்னை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற பெருநகரங்களில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மை தாக்கத்தை வழங்கும்.என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *